| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.124 திருக்குருகாவூர் வெள்ளடை பண் - அந்தாளிக்குறிஞ்சி | 
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந் 
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார் 
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய 
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
  | 
1 | 
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து 
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு 
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய 
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.
  | 
2 | 
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன 
நடைமட மங்கையொர் பாகம் நயந்து 
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய 
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.
  | 
3 | 
வளங்கிளர் கங்கை மடவர லோடு 
களம்பட ஆடுதிர் காடரங் காக 
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய 
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.
  | 
4 | 
சுரிகுழல் நல்ல துடியிடை யோடு 
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க 
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய 
எரிமழு வாட்படை எந்தை பிரானே.
  | 
5 | 
காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத் 
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர் 
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய 
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே.
  | 
6 | 
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
  | 
7 | 
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் மறைந்து போயிற்று.
  | 
8 | 
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் மறைந்து போயிற்று.
  | 
9 | 
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
  | 
10 | 
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் மறைந்து போயிற்று.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |