| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| இரண்டாம் திருமுறை | 
2.14 திருவெண்ணியூர் பண் - இந்தளம் | 
சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா 
உடையானை உடைதலை யிற்பலி கொண்இரும் 
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை 
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.
  | 
1 | 
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் 
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத 
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் 
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
  | 
2 | 
கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் 
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை 
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் 
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.
  | 
3 | 
மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் 
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக 
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை 
ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.
  | 
4 | 
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் 
தாரானைத் தையலோர் பாகமு டையானைச் 
சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை 
ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.
  | 
5 | 
முத்தினை முபவயி ரத்திரள் மாணிக்கத் 
தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய 
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.
  | 
6 | 
காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் 
பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யில் 
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.
  | 
7 | 
மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் 
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி 
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் 
பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.
  | 
8 | 
மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங் 
கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா 
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.
  | 
9 | 
குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய 
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின் 
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில் 
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.
  | 
10 | 
மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் 
திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை 
உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார் 
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |