| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| இரண்டாம் திருமுறை | 
2.8 சிக்கல் பண் - இந்தளம் | 
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை 
தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் 
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி 
ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.
  | 
1 | 
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் 
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் 
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே 
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.
  | 
2 | 
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய 
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள் 
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான் 
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.
  | 
3 | 
கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற் 
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள் 
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரையார்கழல் 
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.
  | 
4 | 
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு 
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் 
வெங்கண்வெள் யேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே 
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.
  | 
5 | 
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் 
தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள் 
விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி 
கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.
  | 
6 | 
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத் 
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் 
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி 
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.
  | 
7 | 
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை 
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே 
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி 
உற்று நீநினை யாய்வினை யாயின ஓயவே.
  | 
8 | 
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங் 
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ் 
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான் 
பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.
  | 
9 | 
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் 
கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர் 
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப் 
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.
  | 
10 | 
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல் 
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச் 
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை 
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |